Skip to main content

Posts

Showing posts from June, 2024

ஆண்மை இல்லாத ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களா?

Sexual Orientation, அதாவது ஒருவருடைய பாலியல் நாட்டம்/ஈர்ப்பு என்பது அவரது பால்நிலை(Gender) மற்றும் அவரது பாலியல் வல்லமை(Sex Drive, Stamina, Erection) போன்றவற்றுடன் நேரடித் தொடர்பு அற்றதாகும். Sexual Orientation ஆனது காதல், இன ஈர்ப்பு/இனக்கவர்ச்சி போன்றவற்றுடனே நேரடியாக சம்பந்தப்படுகிறது. ஒருவரது உடலில் காமத் தீயை பற்ற வகைக்கும் காரணியாகவும் இதனைக் கருதலாம். ஆனால் கட்டாயம் இதனால் மட்டும் தான் ஒருவருடைய பாலியல் ஆசைகளை தூண்டி அவரை கிளர்ச்சியடையச் செய்ய முடியும் என்று முடிவு செய்ய முடியாது. பல்வேறு காரணங்களினால் ஒரு ஆணுக்கு அவனது ஆண்குறியில் விறைப்பு ஏற்படாவிட்டால், அல்லது ஆர்கஸம் அடைந்து, விந்தினை வெளியேற்ற முடியாவிட்டால் அவனை ஆண்மையற்ற ஆணாக கருதுவர். Erectile Dysfunction(ED) மாத்திரம் அல்ல, குழந்தை உருவாக்கக் கூடிய அளவுக்கு ஆரோக்கியமான விந்தினை உற்பத்தி செய்ய முடியாத ஆண்களையும் ஆண்மையற்றவர்களாகவே இந்த சமூகம் பார்க்கிறது. ஆகவே ஆண்மையற்றவர்கள் என்றால் ஒரு குழந்தையை உருவாக்கும் வல்லமை அற்றவர்கள் எனலாம். குறிப்பு: சில ஆண்மையற்ற ஆண்களுக்கு பாதியளவிலோ அல்லது முழுமையாகவோ கூட ஆண்குறியில் விறைப்...

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

தன்னினச் சேர்க்கையாளர்கள் ஒரு Straight பெண்ணை அவ்வளவு எளிதில் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள். Gay/Bisexual ஆண்களின் வீட்டில் திருமணப் பேச்சை ஆரம்பிக்கும் போதே அவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போன்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஓர் ஆணுக்கு கிடைக்குற மதிப்பும் மரியாதையும் அவனுக்கு பொண்டாட்டி புள்ளை குட்டிங்க எல்லாம் இருக்கான்னு பார்த்துட்டுத்தான் இந்த சமூகம் நமக்குத் தருது. குறிப்பிட்ட வயதை தாண்டும் வரை தலைவலி தான். நாம தான் எல்லோரும் நம்ம சொந்தம்ன்னு பைத்தியக்காரத்தனமா நம்பிட்டு இருக்கோம். அவங்க நம்மோட வாழ்க்கைல இருக்குற நெகட்டிவ் மட்டும் தான் பார்க்குறாங்க. அதுக்குப் பின்னாடி இருக்குற தியாகங்களை பார்க்குறது இல்ல. ஒரு சில அனுபவசாலிகளின் சோக கதையை கேட்ட பிறகுதான் புரிகிறது Bisexual Guys மட்டும் இல்லாம பல Gays கூட சமூகத்துக்காக ஒரு கல்யாணம் பண்ணிட்டு, யாருக்கும் தெரியாத நிழல் வாழ்க்கையை ஏன் வாழுறாங்கன்னு. நமது சமூகத்தில் உள்ள ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்கள் சந்திக்கும் மிகப்பெரிய உளப்பிரச்சனையே, அவர்களின் குடும்பத்தாருக்கு தமது உணர்வுகளை புரிய வைப்பது தான். என்ன தான் தலைகீழாக நின...